ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் "சர்வதேச குறைமாத குழந்தைகள்" தினம் கடைபிடிப்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் "சர்வதேச குறைமாத குழந்தைகள்" தினம் மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது. 

இவ்விழாவிற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் குறைபிரசவத்தில் பிறந்து தற்போது நலமுடன் இருக்கும் பல குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். மதுரை, திருச்சி, ஈரோடு போன்ற மாவட்டங்களிருந்தும் பலர் விழாவிற்காக வந்திருந்தனர். 

இவ்விழாவிற்கு மருத்துவக் குழு தலைவரான டாக்டர். சுகுமாரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், 25 வருடங்களுக்கு முன்னர் இம்மருத்துவமனையில் தொடங்கப்பட்ட பச்சிளங்குழந்தைகளுக்கான பிரிவு தற்போது 40 இளங்குழந்தைகளை அனுமதிக்கும் வசதியுடன், உயர் அழுத்த செயற்கை சுவாச கருவிகள், சிபாப், போக்குவரத்து இன்குபேட்டர், 2 தேர்ச்சிபெற்ற சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என வளர்ந்திருப்பது குறித்து சிறப்புரையாற்றினார்.



பச்சிளங்குழந்தை பிரிவின் தலைவரான டாக்டர். சித்தார்த்த புத்தவரப்பு "மருத்துவ அறிவியலின் வளர்ச்சியால் இன்று 24- 25 வார சிசுக்களையும் காப்பாற்றுவது சாத்தியமாகியுள்ளது" என்று கூறினார். சரியான முறையில் செயற்கை சுவாசம் அளித்தல், நோய் தொற்று கட்டுபாடு மற்றும் மூளை வளர்ச்சிக்கு ஏதுவான நெறிமுறைகளின் மூலமும் இக்குழந்தைகளை மூளை அழற்சி, உடல் செயல்பாட்டு குறைகளின்றியும் காப்பற்றலாம். இக்குழந்தைகளின் பராமரிப்பு மருத்துவமனையை விட்டு சென்ற பிறகும் முதல் சில ஆண்டுகளுக்கு தனி கவனத்துடன் இருக்க வேன்டும். மக்களிடமும், மருத்துவர்களிடமும் விழிப்புணர்வை அதிகரிக்கவே இந்நிகழ்ச்சி" என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், 1000 கிராம் குழந்தையாக இம்மருத்துவமனையில் பிறந்து இன்று வெற்றிகரமாக மருத்துவ படிப்பினை முடித்துள்ள மாணவி, 24 வாரதில் பிறந்து இன்று ஆரோக்கியதுடம் இருக்கும் இரட்டையரின் பெற்றோர் என பலரும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...